யாழ் மாவட்டத்தில் கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!
Friday, November 5th, 2021
யாழ் மாவட்டத்தினை சேர்ந்த பலநாள் கலன் உரிமையாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.
கடற்றொழில் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் வி.எம். எஸ். எனப்படும் படகு கண்காணிப்பு கருவிகள், வானொலி தொடர்பாடல் கருவி போன்றவற்றை மீன் பிடிக் கலன்களுக்கு பொருத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதனிடையே யாழ் மாவட்டத்தில் கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத் திட்டங்கள் தொடர்பான முன்னேற்றம் மற்றும் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.
பிரதேச செயலாளர்கள், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பாடநூல் தவறுகளைத் திருத்த அமையப்பெற்றது விஷேட குழு !
கல்வியியலாளர் சேவை பதவியுயர்வுக்கு தமிழ், முஸ்லிம்கள் தகுதியற்றவர்களா - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவா...
வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகள் அனைத்தும் விதிமுறைகளுக்கு அமைவாக ஒழுங்குபடுத்தப...
|
|
|


