கொவிட் மரணங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை!

Tuesday, October 26th, 2021

நேற்றையதினம் 29 கொவிட் மரணங்கள் பதிவானதை இலகுவாக ஏற்றுக் கொள்ள முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கொவிட் மரணங்களின் அதிகரிப்பிற்கு கொவிட் தொற்றாளர்களின் அதிகரிப்பு காரணமா என்பது தொடர்பில் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொவிட் மரண எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் பொதுமக்கள் அனைவரும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


கொரோனா தொற்று எதிர்ப்பு நடவடிக்கை: ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவுக்கு நன்றி தெரிவிக்கும் உலக சுகாதார அமை...
பயணிக்கும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!
முச்சக்கரவண்டிகளை முழுமையாக ஒழுங்குபடுத்திய பின்பே இரட்டிப்பு எரிபொருள் - எரிசக்தி அமைச்சர் கஞ்சன வி...