கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் – மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு!

Thursday, October 21st, 2021

கிளிநொச்சி மாவட்டத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அம்மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் தரப்பினருடன் ஆராய்ந்து தீர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்ட தளபாட உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, தளபாட உற்பத்திகளுக்கான மூலப் பொருட்களான மரங்களை எடுத்து வருவதில் காணப்படும் நடைமுறை சிக்கல்கள் உட்பட எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத் தருமாறு வேண்டுகோள் முன்வைத்தனர்.

மேலும் அக்கராயன் கரும்புத் தோட்டக் காணியை பிரதேச மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்கு பகிர்ந்தளித்தமைக்காக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதேச மக்களினால் வரவேற்று கௌரவிக்கப்பட்டார்.

யுத்த சூழல் காரணமாக கைவிடப்பட்ட சுமார் 196 ஏக்கர் விஸ்தீரணம் உள்ள கரும்புத் தோட்டம் கைவிடப்பட்டிருந்த நிலையில், சில தரப்புக்களினால் கையகப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியை தடுத்து நிறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த காணிகளை பிரதேச மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகிகளை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த கூட்டுறவுச் சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்ததுடன், மேலும் வினைத் திறனுடன் செயற்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.

கிளிநொச்சி மக்கள் எதிர்கொள்ளுகின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகளை காணும் நோக்கிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலர்கள், துறைசார் அதிகாரிகள் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வுகளை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

அரச வேலை வாய்ப்பு பெற்றுக் கொண்ட ஊர்காவற்துறை பிரதேச இளைஞர் யுவதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு...
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டக் காணியில் தற்காலிக நெற்செய்கை சிறந்த விளைச்...
சீசெல்ஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ...

சேவை செய்தவர்களுக்கு பதவி உயர்வு தேவை  -  நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
மக்கள் நலன்சார் திட்டங்கள் அர்த்தமுள்ளவகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் – அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிட...
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடன் திட்டங்களை கடனுக்கு வழங்கிக்கொண்டிருக்கின்றீர்கள் – நாடாளு...