அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டும் இலங்கைக்கு செல்லவும் – தனது நாட்டு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்து!
Thursday, September 23rd, 2021
அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு தமது நாட்டு மக்களுக்கு பிரித்தானியா அறிவித்துள்ளது.
இலங்கையை கொரோனா தொற்றின் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்குவதாக நேற்று பிரித்தானியா அறிவித்திருந்தது. இந்த நிலையிலேயே, பிரித்தானியர்கள் இலங்கைக்கு அத்தியாவசியக் காரணங்களுக்காக மட்டும் பயணிக்குமாறு பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொதுநலவாயச் செயலகம் அறிவுறுத்தியுள்ளது.
குறுகிய அறிவிப்பின் பேரில் இலங்கையில் பயணத்தடைகள், ஊரடங்கு சட்டம் என்பன ஏற்படுத்தப்படும் என்பதோடு, விமானப் பயணங்களிலும் மாற்றம் ஏற்படக்கூடும் எனவும் பிரித்தானியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
திருகோணமலைமாவட்ட தமிழ்ப் பாடசாலைகள் பகிஷ்கரிப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ள முக்கிய தகவல்!
21 ஆம் திகதியின் பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்க எதிர்பார்ப்பு - அமைச்சர் ரமேஷ் பத்தி...
|
|
|


