இரு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டாலும் சுகாதார பரிந்துரைகளை பின்பற்றுவது அவசியம் – பொதுமக்களிடம் சமுதாய மருத்துவ விசேட நிபுணர் வலியுறுத்து!

Thursday, September 23rd, 2021

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று சுகாதார பரிந்துரைகளைப் பின்பற்றாதோருக்கு மீண்டும் தொற்று உறுதியாவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக சமுதாய மருத்துவ விசேட நிபுணர் பேராசிரியர் சுனெத் அகம்பொடி தமது ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றாத இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டோரில் 65 முதல் 70 சதவீதமானோருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாவதாக புதிய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தடுப்பூசி செலுத்துவதால் மரணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியுமே தவிர, தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

எனவே, தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டாலும் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு பேராசிரியர் சுனெத் அகம்பொடி வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


அமரர் பாலேந்திரன் தங்கரத்தினத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி ...
எந்த ஒரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்களே இதுவரை கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர் – சுகாதார அ...
மின்சாரசபை கட்டண அதிகரிப்பு தாமதத்தால் பணவரவு பாதிப்பு - நாட்டின் நாணய கொள்கைக்கும் பாதிப்பு என மத்த...