பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய படையிர் கடமையில் * ஜனாதிபதியின் விசேட உத்தரவு!
Wednesday, September 22nd, 2021
பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய படையினரை கடமைகளில் ஈடுபடுத்தும் வகையிலான விசேட கட்டளையொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய இன்றைய(22) நாடாளுமன்ற அமர்வுகளில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட விசேட கட்டளையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வாசித்திருந்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் 12 ஆவது சரத்தில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், இந்த கட்டளையை பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுய விருப்பின் பேரில் இராஜினாமா செய்யும் கால அவகாசம் மீண்டும் நீடிப்பு!
உள்ளூராட்சிகளின் எல்லை நிர்ணய மேன்முறையீட்டு விசாரணையின் கால எல்லை மேலும் நீடிப்பு!
விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தத் தேவையான திட்டங்களை அரசாங்கம் செயற்படுத்த ஆரம்பித்துள்ளது - ...
|
|
|


