நில அதிர்வுகளை கண்காணிக்கும் 5 ஆவது மையத்தை மேல்மாகாணத்தில் ஸ்தாபிக்க நடவடிக்கை – சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!
Thursday, September 16th, 2021
இலங்கையில் நில அதிர்வுகளை கண்காணிக்கும் 5 ஆவது மையத்தை மேல் மாகாணத்தில் ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாட்டை அண்மித்த சில பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. லுணகம்வேஹர பகுதியில் நில அதிர்வுகள் உணரப்பட்டதால் நாட்டில் மேலும் நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும், அவ்வாறான எந்த தகவல்களையும் நிபுணர் குழு தமக்கு அறிவிக்கவில்லை. இதனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஊழியர்களை அழைப்பு விடுக்கும் நடைமுறை மீண்டும் திருத்தம் !
அத்தியாவசிய ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு பணம் வேண்டும் - அமைச்சரவையில் பேசவுள்ளதாக அமைச்சர் நளின் பெர்ன...
அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் ஜனாதிபதி தேர்தல் - பணமதிப்பீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்!
|
|
|


