பட்டதாரிகளின் பயிற்சிக் காலத்தை மேலும் 6 மாதங்கள் நீடிக்க நடவடிக்கை!
Monday, September 13th, 2021
அரச துறையில் சேர்க்கப்பட்டுள்ள 60 ஆயிரம் பட்டதாரிகளுக்கான பயிற்சி காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி இந்த முடிவை செயல்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்படவுள்ளது. அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களை அங்கீகரித்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ஆள்களை நியமிக்கும் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் கேட்கப்படவுள்ளது.
அரச துறையில் சேர்க்கப்பட்டுள்ள பயிற்சியாளர்களில் 18 ஆயிரம் பேரை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதேவேளை பயிற்சி காலம் அதிகாரப்பூர்வமாக இந்த மாதத்துடன் முடிவடையுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பிணைமுறி மோசடி விவகாரம் குறித்த விஷேட அறிக்கை இன்று கையளிப்பு!
நாடு முழுவதும் பாதுகாப்பு கடமைகளுக்காக முப்படையினரும் களத்தில் – ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது அதி வ...
பாரபட்சம் கிடையாது - இராணுவத்தினருக்கு இராணுவத் தளபதி கடுமையான எச்சரிக்கை!
|
|
|


