சதோச மற்றும் அரச நிறுவனங்களின் ஊடாக ஆடைகளை விற்பனை செய்ய நடவடிக்கை – வர்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன அறிவிப்பு!
Sunday, September 12th, 2021
சதோச மற்றும் அரச நிறுவனங்களின் ஊடாக ஆடைகளை விற்பனை செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வர்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த இடங்களில் தற்போதுள்ள விலையையும் விட குறைந்த விலைக்கு ஆடைகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கைக்கான ஆடைத் தேவையில் 100 சதவீதமும் உள்நாட்டு உற்பத்திகளைக் கொண்டு பூரணப்படுத்துவதற்கு முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக உள்ளுர் சந்தையில் ஆடைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அலுகோசு பதவிக்கான விண்ணப்பப்படிவங்களை பரிசீலிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!
முச்சக்கர வண்டி தொடர்பில் முக்கிய அறிவித்தல்!
நவராத்திரி தினத்தை முன்னிட்டு இந்து சமய விழுமியங்களை ஊக்குவிக்கும் முகமாக 40 ஆலயங்களுக்கு தலா 50 ஆயி...
|
|
|


