மத்திய வங்கி ஆளுநராக மீண்டும் பதவியேற்கவுள்ளதை உறுதி செய்த அஜித் நிவாட் கப்ரால்!
Thursday, September 9th, 2021
ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் மத்தியவங்கி ஆளுநராக பொறுப்பேற்கவுள்ளதாக அஜித் கப்ரால் தெரிவித்துள்ளார்.
ஒருவார காலத்திற்குள் மத்திய வங்கி ஆளுநராக பொறுப்பேற்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவியை விரைவில் இராஜினாமா செய்யவுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் மிகவும் நெருக்கடியான தருணத்தில் உள்ளதால் என்னை மத்தியவங்கி ஆளுநராக பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார் நான் அதனை ஏற்றுக்கொண்டுள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பேச்சுக்கள் தோல்வி வேலைநிறுத்தம் தொடர்கின்றது!
களவுப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் திருடர்களின் மனைவிமார் பொலிஸாரால் கைது!
கொரோனா தொற்று எதிர்ப்பு நடவடிக்கை: ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவுக்கு நன்றி தெரிவிக்கும் உலக சுகாதார அமை...
|
|
|


