மத்திய வங்கி ஆளுநராக மீண்டும் பதவியேற்கவுள்ளதை உறுதி செய்த அஜித் நிவாட் கப்ரால்!

Thursday, September 9th, 2021

ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் மத்தியவங்கி ஆளுநராக பொறுப்பேற்கவுள்ளதாக அஜித் கப்ரால் தெரிவித்துள்ளார்.

ஒருவார காலத்திற்குள் மத்திய வங்கி ஆளுநராக பொறுப்பேற்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவியை விரைவில் இராஜினாமா செய்யவுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் மிகவும் நெருக்கடியான தருணத்தில் உள்ளதால் என்னை மத்தியவங்கி ஆளுநராக பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார் நான் அதனை ஏற்றுக்கொண்டுள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


வெறிச்சோடியது உடுவில் - அச்சத்துடன் பரிசோதனை முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள்!
அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம் - தற்காலிக இன்னல்களுக்காக அரசாங்கம் பொதுமக்களி...
கிளிநொச்சி திடீர் சோதனை - 13 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக விலை கட்டுப்பாட்டு பிரிவினர் தகவல்...