இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகரின் நியமனம் தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது – இந்திய தூதரகம் அறிவிப்பு!
Tuesday, September 7th, 2021
இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள அசோக மிலிந்த மொரகொடவின் நியமனத்தினை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என வெளியான செய்தியில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரக பேச்சாளர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக நியமனம் பெற்று புதுடில்லிக்கு சென்றுள்ள மிலிந்த மொரகொடவின் நியமனச்சான்றினை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என சில தேசிய பத்திரிகைகள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.
இந்தநிலையிலேயே இந்திய உயர் ஸ்தானிகராலயம் அதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொலித்தீனுக்கு மாற்றீடாக புதிய பொலித்தீன்!
ஈ.பி.டி.பி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடும் எதிர்ப்பு - யாழ் மாநகரின் பாதீடு இரண்டாவது தடவைய...
அரசியல் இலாபம் கருதி செயற்படுகின்றது தமிழ்த் தரப்பு - நாட்டு மக்கள் விரும்பும் தீர்வை ஜனாதிபதி ரணில்...
|
|
|


