‘சதொச’வினால் அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளிக்கும் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு!
Thursday, September 2nd, 2021
மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் துரித வேலைத்திட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதற்கமைய இரண்டு முறைகளின் கீழ் உணவு பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படுதாக ‘சதொச’ நிறுவனத்தின் தலைவர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் நாடுமுழுவதிலுமுள்ள அனைத்து சதொச கிளைகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சதொச கிளைகளை திறந்து வைப்பதன்மூலம் கொரோனா கொத்தணியை ஏற்படுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டை மறுத்துரைப்பதாகவும் ‘சதொச’ நிறுவனத்தின் தலைவர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் 03 தினங்களுக்கு வரையறை!
வட மாகாணத்தை அபிவிருத்தி செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் – யாழ்ப்பாணத்தில் பிரதமர் தெரிவிப்பு...
பாடப்புத்தகங்களை அச்சிட இந்தியா 10 மில்லியன் டொலர்கள் உதவி - இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிப்பு!
|
|
|


