செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் தடுப்பூசி டிஜிட்டல் சான்றிதழ் வழங்க ஏற்பாடு – சுகாதார அமைச்சர் அறிவிப்பு!
Wednesday, August 25th, 2021
கொரோனா தடுப்பூசியை பெற்றமையை உறுதிப்படுத்தும் டிஜிட்டல் சான்றிதழ் செப்டம்பர் 15ஆம் திகதிக்கு பின்னர் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் – செப்டம்பர் முதல் வாரத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 75 வீதமானோர் இரண்டாவது டோஸைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தவகையில் செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டின் தடுப்பூசி திட்டத்தின் சூழ்நிலையின் அடிப்படையில் டிஜிட்டல் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
யாழ்பாணத்தில் அதிகளவு உற்பத்து - மரக்கறிகளின் மொத்த விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிப்பு!
இலங்கை சிறார்கள் ஹிந்தி மற்றும் சீன மொழிகளை கற்கவேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை!
போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் பேருந்துகளின் அலங்காரம் தொடர்பில் விசேட கலந...
|
|
|


