கொரோனா தொற்றால் மேலும் 61 பேர் பலி – கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கும் தொற்றுறுதி!
Sunday, August 1st, 2021
கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 61 பேர் உயிரிழந்துள்ள தாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந் தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 441 ஆக அதிகரித்துள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் இறுதியாக மரணித்த 61 பேரில் 25 பெண்களும் 36 ஆண்களும் அடங்கியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை
நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 150 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 8 ஆயிரத்து 12 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றால் இதுவரை குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கையும் 2 இலட்சத்து 77 ஆயிரத்து 118ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பொலிஸ் அதிகாரியை தாக்கிய பெண் சட்டத்தரணி கைது!
சிரமங்களை எதிர்கொண்டுள்ள போதிலும் அரசாங்கம் அபிவிருத்தி செயற்பாடுகளில் ஒருபோதும் பின்வாங்காது - அமைச...
தங்கம் மற்றும் இலத்திரனியல் பொருள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்துபவர்களுக்கு அதிகபட்ச தண்...
|
|
|


