நாட்டில் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு – ஒருவாரத்தில் 51 பேர் மரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!
Sunday, August 1st, 2021
நாட்டில் கடந்த ஜூலை 24 ஆம் திகதிமுதல் 30 வரையான காலப் பகுதியில் வீதி விபத்துக்கள் காரணமாக 51 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த காலகட்டத்தில் மொத்தம் 380 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் அதனால் 260 பேர் காயமடைந்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை வீதி விபத்துக்களால் நேற்றையதினம் மாத்திரம் ஒன்பது உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஆசிரியர் ஆலோசகர் சேவைக்கு அமைச்சரவை அனுமதி!
கொரோனா குறித்த தகவல்களை அரசியலாக்காதீர்கள் - அரசியல்வாதிகளிடம் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் கோரி...
செலுத்த வேண்டிய கடனில் இருந்து சுமார் 08 பில்லியன் டொலர்களை குறைக்க முடிந்துள்ளது - ஜனாதிபதி ரணில் வ...
|
|
|


