யாழ்ப்பாணத்தில் பாடசாலை சார்ந்த 72 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டள்ளது !
Thursday, July 15th, 2021
ஆசிரியர்கள், அதிபர்கள், கல்விசாரா ஊழியர்கள் என யாழ் மாவட்டத்தில் 72 சதவீதமானவர்களுக்கு கொரோனாவுக்கான சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, யாழ் மாவட்டத்தில் பாடசாலை சார்ந்த 7 ஆயிரத்து 432 பேர் இதுவரை கொரோனாவுக்கான சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் வகையில் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு நாடு முழுவதுமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம்முதல் இரண்டாம் கட்டத்துக்கான முதல் டோஸ் தடுப்பூசியை யாழ்ப்பாண மாவட்டத்தில் 51 ஆயிரத்து 390 பேர் இதுவரை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரதேச செயலர் பிரிவுகளில் மக்களுக்கான நடமாடும் சேவை!
எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பாக இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை - அமைச்சருமான ஹெகல...
அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டமூலத்தை, வெகுவிரைவில் நிறைவேற்ற வேண்டும் - சர்வகட்சிக் கூட்டத்தில்...
|
|
|


