முல்லைத்தீவில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்!
Tuesday, July 6th, 2021
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றும் பணி நேற்று ஆரம்பமானது. முல்லைத்தீவு மாவட்டத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாசாலையில் இந்தப் பணி தொடங்கியது.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொவிட்-19 தடுப்பூசியைப் பெற முடியும் என்று கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.
முதல் கட்டமாக புதுக்குடியிருப்பு, வெலிஓயா பகுதிகளில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நேற்று தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றவர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் இரண்டாம் திகதி இரண்டாவது டோஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரதமரின் கண்காணிப்பின் கீழ் மாத்தறையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம்!
நாடாளுமன்றத்தில் பைத்தியக்காரர்கள்போல் நடந்துகொள்ள வேண்டாம் - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வலிய...
விலை உயர்வின் காரணமாக யாழ்ப்பாணத்தில் பழங்கள், இளநீர் வியாபாரம் பாதிப்பு என விபாரிகள் கவலை – உள்ளூர்...
|
|
|
பயன்பாடற்ற கார்பன் பேனாக் குழாய்கள் மற்றும் பற்தூரிகைகள் மீள்சுழற்சி கொள்கலனை மதிப்பீடு செய்தார் பிர...
வவுனியா வைத்தியசாலைக்கு 9 வைத்தியர்கள் புதிதாக நியமனம் - வடக்கில் புதிதாக 50 வைத்திய உத்தியோகத்தர்கள...
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களுக்கு தொழில்சார் வழிகாட்டல்களை வழங்கும் விசேட வேலைத்திட்டம்...


