மேலும் 12 மாவட்ட மக்களுக்கு இன்றுமுதல் தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!
Tuesday, June 8th, 2021
12 மாவட்டங்களுக்கான Sinopharm தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன இதற்காக 450 ஆயிரம் தடுப்பூசிகளை 12 மாவட்டங்களுக்கும் அனுப்பியுள்ளதாகவும் கறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தடுப்பூசி திட்டம் இதுவரை முன்னெடுக்கப்படாத மாவட்டங்களுக்கே இந்த தடுப்பூகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலியா, மாத்தளை, புத்தளம், கேகாலை, பதுளை, மொனராகலை, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய 12 மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உயர்தர பரீட்சை மண்டப பணிகளில் பல்வேறு முறைகேடுகள்!
சுகாதார அமைச்சு முழுமையாக அனுமதி கொடுத்தால் நாளைமுதல் போக்குவரத்து சேவை வழமைக்கு திரும்பும் – போக்கு...
வழிபாட்டுத் தலங்களில் பின்பற்றவேண்டிய கொரோனா தடுப்பு சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை வெளியிட்டது சுகா...
|
|
|
பூர்த்தி செய்யப்படாத வீதி அபிவிருத்தி பணிகளை பொறுப்பேற்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை தீர்மானம்!
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அறிவிப...
ஜனவரி 17 இல் 2023 ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில...


