இலங்கை உள்ளிட்ட 7 நாடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை – பிரித்தானியா அறிவிப்பு!
Friday, June 4th, 2021
உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் பிரித்தானியாவால் இலங்கை உள்ளிட்ட 7 நாடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சிவப்பு எச்சரிக்கையில் ஆப்கானிஸ்தான் பஹ்ரேன் போன்ற நாடுகளும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 7 நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டிலிருந்து பிரித்தானியாவிற்கு வருகை தரும் நபர்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த சிவப்பு எச்சரிக்கையானது எதிர்வரும் 8 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு செயற்பாடுகள்!
O/L விடைத்தாள் மீள்திருத்த விண்ணப்பம்!
ஒக்டோபர் 15 ஆம் திகதி ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை இடம்பெறும் – பரீட்சை திணைக்களம...
|
|
|


