வவுனியா மாவட்ட மக்களுக்கும் விரையில் கொரோனா தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு – துறைசார் அதிகாரிகளுடனான சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!
Thursday, June 3rd, 2021
சுகாதார அமைச்சர் மற்றும் மாவட்டம் சார்ந்த சுகாதார தரப்பினருடன் கலந்துரையாடி, வவுனியா மாவட்டத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் மற்றும் குறைபாடுகளை நிலவர்த்தி செய்தல் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் வவுனியா மாவட்டத்திற்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த மாவட்டத்தின் துறைசார் அதிகாரிகளுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதனிடையே வவுனியா சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காலஞ்சென்ற பிரபல வர்த்தகரும், வவுனியா வாடி வீட்டின் ஒப்பந்தகாரருமான கதிர்காமராஜாவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாகாணசபையில் எதுவும் இல்லை என்றவர் மீண்டும் முதல்வர் பதவிக்கு முண்டியடிப்பது ஏன்? - யாழில் ஊடகவியலாள...
மாதர் அமைப்புகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள விஷேட செய்தி! (Video)
வடக்கு இளைஞர் யுவதிகளுக்கு பொன்னான வாய்ப்பு - அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் செயற்பாடு குறித்தும் அமைச...
|
|
|




