வலி. வடக்கு எரிபொருள் நிரப்பு நிலையம் விடுவிப்பு!
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இராணுவத்தின் வசமிருந்து விடுவிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் தெல்லிப்பளை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக இன்று (10) தெல்லிப்பளைப் பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், குறித்த நிலையம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காங்கேசன்துறை பேருந்து தரிப்பு நிலையமானது 27 வருடங்களிற்கு பின்னர் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி சொந்த இடத்திற்கு சென்றுள்ளதுடன், காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மையிலுள்ள பழைய பேருந்து தரிப்பிடத்திற்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனா அச்சுறுத்தல்:இரண்டு இலட்சத்தை நெருங்கும் பலியானவர்களின் எண்ணிக்கை – மருத்துவத் தீர்வின்றி தவி...
அரச சார்பற்ற நிறுவனங்கள் தரவரிசையில் இலங்கை முன்னேற்றம் - பல சீர்திருத்தங்களின் பெறுபேறாக இது அமைந்த...
இணைத வழி நிதி மோசடிகள், வடக்கு கிழக்கில் அதிகரிப்பு!
|
|
|


