வலி. கிழக்கில் வழிப்பறித் திருடர்களின் தொல்லை அதிகரிப்பு!

Wednesday, August 10th, 2016

வலி. கிழக்குப் பிரதேசத்தில் வழிப்பறித் திருடர்களின் தொல்லை மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக நீர்வேலி, கோப்பாய், இருபாலை, சிறுப்பிட்டி ஆகிய பகுதிகளில் வழிப்பறித் திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையால் பொதுமக்கள் பாதிப்புக்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

பட்டப் பகல் வேளையில் ஆட்கள் நடமாட்டம் குறைந்த வீதிகளில் மோட்டார்ச் சைக்கிள்களில் வரும் திருடர்கள் பெண்கள் அணிந்து செல்லும் தங்க நகைகளை அறுத்துக் கொண்டு செல்வதாகவும், எனவே, குறித்த பகுதிகளில் இடம்பெறும் வழிப் பறித் திருட்டுக்களைத் தடுக்கக் கோப்பாய்ப் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதும் மக்களின் கோரிக்கையாகவுள்ளது.

Related posts:


எதிர்வரும் புதனன்று ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கின் தீர்ப்பு – விடுதலையாகிறார் பிள்ளையான்!
பொதுமக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால் ஊரடங்கின் பலனை பெற்றுக்கொள்ள முடியாது - பொது சுகாதார...
சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகை பன்மடங்காக அதிகரிப்பு - ஜனாதிபதி ரணில் விக்ரமச...