இலங்கை தமிழர் நலனில் தி.மு.க. இன் கரிசனை தொடரும் – அமைச்சர் டக்ளஸிடம் தமிழக மீன்பிடித் துறை அமைச்சர் உறுதி !

Thursday, May 6th, 2021


………….
தமிழகத்தின் மீனபிடித்துறை, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை வளர்ப்பு துறை அமைச்சராக பதிவியேற்கவுள்ள அனிதா ஆர். இராதாகிருஸ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்தில் கடற்றொழிலாளர் சார்பான விவகாரங்களில் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அண்மையில் இடம்பெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் நாளை பதவியேற்கவுள்ள நிலையில், புதிய மீன்பிடித்துறை அமைச்சருடன் தொலைபேசி ஊடாக உரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதன்போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்த அனிதா ஆர். இராதாகிருஸ்ணன், இலங்கை தமிழ் மக்கள் தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்தும் அக்கறை செலுத்தி வருவதாகவும் எதிர்காலத்திலும் இலங்கை தமிழ் மக்களின் நலன்களில் தி.மு.க. அக்கறை செலுத்தும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வடக்கின் வறிய குடும்பங்களும் மின்சார ஒளி பெற விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - நாடாளுமன்றில்...
வாள் வெட்டும், கல்வியில் பின்னடைவும் எமது அடையாளமல்ல – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
கரைநகர் படகு கட்டும் தொழிற்சாலையின் செயற்பாடுகள் மீண்டும் செயற்றிறன் மிக்கதாக முன்னெடுத்துச் செல்லப...

முப்படைகளுக்குமான ஆளணியின்போது இன விகிதாசாரம் பேணப்பட வேண்டும் -  நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வல...
மக்களின் நலன்களுக்காக நீதிமன்றம் செல்லாதவர்கள் சுயலாபங்களுக்காக நீதிமன்றம் சென்றுள்ளார்கள் – செயலாளர...
அனுபவங்களின் அடிப்படையில், தமிழ் தரப்புக்களின் அணுகுமுறைகள் அமைய வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத...