வடக்கு வர்த்தகர்களின் அசௌகரியங்கள் களையப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!

Thursday, April 29th, 2021


வடக்கு மாகாணத்தினை சேர்ந்த வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் அனைத்திற்கும் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவுடன் இன்று(29.04.2021) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது, வடக்கு வர்த்தகர்களினால் தன்னிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை வர்த்தக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்ற கடற்றொழில் அமைச்சர், குறித்த கோரிக்கைகள் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தினையும் வலியுறுத்தினார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட அமைச்சர் பந்துல குணவர்த்தன, முன்னுரிமை அடிப்படையில் வடக்கு வர்த்தகர்களின் அனைத்து எதிர்பார்ப்புக்களும் நியாயமான முறையில் தீர்த்து வைக்கப்படும் என்று உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

காணிப் பிணக்குகளை தீர்ப்பதற்கு துரித கதியில் காணிக் கச்சேரிகள் நடத்தப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா...
நாம் தேர்தலில் போட்டியிடுவது ஆளவேண்டும் என்ற ஆசையிலல்ல: மக்கள் உரிமையோடு வாழவேண்டும் என்பதற்காகவே - ...
சீநோர் நிறுவனத்தின் வடிவமைப்பில் தயாரிக்கப்பட்ட மீன் விற்பனை நிலையம் மற்றும் படகுகள் கடற்றொழில் அமைச...

ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை தேவை-டக்ளஸ்தேவானந்தா வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்குத்...
காப்பெற் வீதியாக அமைக்கப்படவுள்ள ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை வீதிக்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து...
சரியான அரசியல் சூழல் இருக்கும் போதுதான் மகிழ்ச்சியான வாழ்வை வாழ முடியும் – ஈவினை தமிழ் கலவன் பாடசாலை...