விமானப் பயணிகளின் மூலம் வைரஸ் நாட்டிற்குள் நுழைவதை தடுப்பதற்கு நடவடிக்கைகள் – விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி!
Friday, April 23rd, 2021
விமானப் பயணிகளின் மூலம் கொரோனா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
விமானப் பயணிகள் ஒன்றிணைவதை தடுப்பதற்கான விசேட வேலைத்திட்டங்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. சகல விமானப் பயணிகளும் சுகாதார சட்டங்களை பின்பற்றுவது அவசியமாகும்.
அத்தியாவசிய விமானப் பணியாளர்களை மாத்திரம் நாளை தொடக்கம் சேவைக்கு அழைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறப்பு சலுகை.!
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் அரசாங்கம் தீவிரம் - பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவிப்பு!
கீரிமலை குப்பை மேட்டிற்கு தீ வைத்த அத்துமீறி நுழைந்த கும்பல்!
|
|
|


