அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற குற்றத்தில் 150 பேருந்துகளின் அனுமதிப் பத்திரம் இரத்து – போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு!
Wednesday, April 7th, 2021
இருக்கைகளுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்ற குற்றத்திற்காக 150 பேருந்துகளின் அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் புதுவருடத்திற்காக தமது சொந்தவூர் சென்று திரும்பும் மக்களின் வசதிக்காக விசேட போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த திட்டதில் இலங்கை போக்குவரத்து சபையின் 1992 பேருந்துகளும், 21 புகையிரதங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் 1,800 தனியார் பேருந்துகளும் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் குறித்த அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் இந்த விசேட போக்குவரத்து சேவை எதிர்வரும் 9 ஆம் திகதியில் இருந்து 16 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சைட்டம் மருத்துவ கல்லூரி பொறுப்பேற்கப்பட மாட்டாது!
கைதடி முதியோர் முதியவர்கள் முதற்தடவையாக ஆன்மிகச் சுற்றுலா!
நாளாந்தம் ஒரு சிறுமியாவது துஷ்பிரயோகத்துக்குள்ளாகும் நிலை காணப்படுகிறது - சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியச...
|
|
|
வெளிநாடு செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு 15, ஆயிரம் அமெரிக்க டொலர் காப்புறுதி - ஜனவரிமுதல் நடைமுறை ...
பொருளாரத்தில் மீட்சி ஏற்படுமாயின் வாகன இறக்குமதி தொடர்பில் தீர்மானிக்கப்படும் - மத்திய வங்கி ஆளுநர் ...
கத்தோலிக்க ஆயர் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயார் - ஜனாதிபத...


