மூன்று தனியார் மின் உற்பத்தி நிலையங்களை கொள்வனவு செய்ய இலங்கை மின்சார சபை தீர்மானம்!
Saturday, April 3rd, 2021
தனியாருக்கு சொந்தமான 3 மின் உற்பத்தி நிலையங்களை கொள்வனவு செய்ய இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போதுள்ள மின் உற்பத்தி நிலையங்களினூடாக சபையின் அவசர மின்சாரத் தேவை பூர்த்தி செய்யப்படுவதாகவும் இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நீர் மின்னுற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படும் காலப்பகுதியில் இந்த மின் நிலையங்களினூடாக நாளாந்தம் 170 மெகா வாட் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய, குறித்த 3 தனியார் மின் உற்பத்தி நிலையங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரதமர் வியட்நாம் பயணம்!
அவிருத்தித் திட்டங்களின்போது வட்டாரங்களின் முக்கியத்துவத்தையும் தேவைப்பாடுகளின் அவசியமும் கருத்திற்க...
புலிகளுக்கும் ஜே.வி.பிக்கும் பாரிய வேறுபாடுகள் எதுவும் கிடையாது - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்கா...
|
|
|


