வட மாகாணத்தில் நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டு!

Monday, March 22nd, 2021

வட மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு நேற்று கொரோனா தொற்றுறுதியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் நேற்று 290 பேருக்கான பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவற்றில் 14 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தொற்றுறுதியானவர்களில் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள 7 பேரும் அடங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


விஞ்ஞான தொழல்நுட்ப பட்டதாரிகளுக்கு ஜப்பானில் தொழில் புரிய வாய்ப்பு  - யாழில் ஜனாதிபதி மைத்திரி!
அதிகபட்ச விலைக்கு மேல் பொருட்களை விற்றால் ஒரு லட்சம் ரூபா ரூபாய் அபராதம் - வர்த்தக அமைச்சர் பந்துல க...
சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு  தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர...