சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் குறித்து அறிவிப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!
Sunday, February 21st, 2021
பொது மக்கள் தங்கள் பிரதேசங்களில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் குறித்து அறிவிப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
சூழல் அழிப்பு தொடர்பில் அறிவிப்பதற்காக 1997 என்ற தொலைபேசி இலக்கம் நிறுவப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை அபே கம வளாகத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டதன் பின் ஊடவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சூழலுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்துவதற்கு ஒத்துழைக்கும் அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய வள பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த சங்கைக்குரிய எல்லே குணவங்ஷ தேரர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உதவி செய்யச் சென்றவரை தாக்கி உடமைகளை பறித்த கும்பல் !
தேவையான உணவுப் பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்க நடவடிக்கை - அமைச்சர் சமல் ராஜபக்ஷ!
வடக்கில் தென்னை மரங்களில் அதிவேகமாகப் பரவி வரும் வெள்ளை ஈக்கள் - முற்றுமுழுதாக அழிவடையும் ஆபத்தை எதி...
|
|
|


