உயிர்த்த ஞாயிறு அறிக்கை குறித்து அமைச்சரவையில் கலந்துரையாட விசேட தினம் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!
Tuesday, February 9th, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்றையதினம் கலந்து கொண்டபோதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அது தொடர்பில் கலந்துரையாட விசேட தினமொன்று விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக் குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மோசடி நிறைந்த நிறுவனங்களை சீர் செய்வது அவசியமாகும் - ஜனாதிபதி
யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்து!
கொள்ளுப்பிட்டி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 05 இலட்சம் நிதியுதவி -நடவடிக்கை எடுக்குமாறு ஜனா...
|
|
|
முல்லை. கட்டுக்கரைக்குளம் புனரமைப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அக்கறையற்றிருக்கின்றது - ...
முடக்க நிலையிலிருந்து நாடு திறக்கப்பட்டதும் அடைவு கடைகள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களில் அலை மோ...
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் 90...


