அனைத்து நிர்மாணப் பணிகளும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் மேற்பார்வையில் துரிதப்படுத்தப்பட வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து!

Sunday, February 7th, 2021

நாடு முழுவதும் உள்ள கிராமப்புற தோட்டங்களை அண்மித்த சிறிய உள்நுழைவு வீதிகள் மற்றும் சிறிய வீதிகளை இணைக்கும் வகையில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என  ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் – கிராமப்புறங்களில் உள்ள அனைத்து பாலங்கள் குறித்தும் முறையாக கண்காணித்து அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான அபிவிருத்திச் செயற்பாடுகளில் ஒப்பந்தக்காரர்கள் உரிய முறையில் செயற்படாவிட்டால், அவர்களை விடுத்து பொருத்தமான நிறுவனங்களிடம் அவற்றை ஒப்படைக்குமாறும் துறைசார் தரப்பினருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் அனைத்து நிர்மாணப் பணிகளும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் மேற்பார்வையில் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பெண்கள் மீதான வன்முறைகள் கட்டுக்குள் வரும் யாழ்ப்பாண மூத்த பொலிஸ் அத்தியகட்சர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவிப்பு...
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பிரகளை பொதுமக்கள் சந்திக்க மீண்டும் வாய்ப்பு!
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டாலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது ...

தேர்தலை நீதியாகவும் நேர்மையாகவும் நடத்துவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் - கோருகின்றார் யாழ் அரச...
உலக அமைதிக்காக வட கொரியாவுடன் இணைந்து செயற்பட தயார் - சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அதிரடி அறிவிப்பு!
இன்று நள்ளிரவுமுதல் அத்தியாவசிய சேவையாக மாற்றப்படுகின்றது ரயில் சேவை - அமைச்சர் பந்துல குணவர்தன அறிவ...