இம்மாத இறுதிக்குள் 14 ஆயிரம் பட்டதாரி பயிலுனர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை – அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவிப்பு!
Friday, February 5th, 2021
நாட்டின் அரச சேவையில் 14 ஆயிரம் பட்டதாரிகள் இம்மாத இறுதிக்குள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் 2019 ஆம் ஆண்டு பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வது பற்றி அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அமைச்சர் ஜனக்க பண்டார இதனை தெரிவித்துள்ளமை கறிப்பிடத்தக்கது.
Related posts:
தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான நிபந்தனைகளை திருத்துமாறு அரச தலைவர் மின்சக்தி அமைச...
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வாரத்திற்கு ஒரு முறை குறைக்கப்படும் - வர்த்தக மற்றும் உணவுப் பாது...
இந்தோனேசியாவில் 5.9 மெக்னிடியூட் அளவிலான நிலஅதிர்வு!
|
|
|


