தோட்டக் கம்பனிகளால் தன்னிச்சையாக செயற்படமுடியாது – சம்பள உயர்வு விவகாரம் குறித்து அமைச்சர் கெஹலிய எச்சரிக்கை!
Wednesday, January 20th, 2021
சம்பள உயர்வு விடயத்தில் தோட்டக் கம்பனிகளால் தன்னிச்சையாக செயற்பட முடியாது என அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர் – “பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படவேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கை ரீதியிலான முடிவாகும்.
அந்த முடிவை நிறைவேற்றும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகாது. அதில் வரும் சவால்களை அரசாங்கம் எதிர்கொள்ளும். கடந்த காலங்களில் 50 ரூபாவைக்கூட பெற்றுக்கொள்ளமுடியாத நிலை காணப்பட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தமிழில் முறைப்பாடுகளை பதிவு செய்ய புதிய தொலைபேசி இலக்கங்கள்!
கட்டுப்பாடின்றித் தொடரும் வன்முறைகுள் சிக்கித் தவிக்கும் குடாநாடு - பரிகாரம் காணப்படுமா என மக்கள் ஏக...
உளுந்து தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கை - பிரதமர் மஹிந்த அதிரடி உத்தரவு!
|
|
|


