ஹோட்டல் உரிமையாளர்களுக்கு எந்தவொரு மூன்றாம் தரப்பினரும் இலஞ்சம் கொடுக்க கூடாது – இராணுவத்தளபதி கடும் எச்சரிக்கை!
Thursday, January 14th, 2021
தனிமைப்படுத்தல் நிலையங்களாக உள்ள ஹோட்டல் உரிமையாளர்களுக்கு எந்தவொரு மூன்றாம் தரப்பினரும் இலஞ்சம் கொடுக்க கூடாது என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா எச்சரித்துள்ளார்.
கொவிட் -19 வைரஸின் இரண்டாவது அலை பரவிய பின்னர், இதுபோன்ற ‘மோசடி’ நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறினார். .
இந்த நாட்டிற்கு வந்து ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை நியாயமான விலையில் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்..
கொவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் ஜெனரல் சவேந்திர சில்வா, கொவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய மையத்தில் ஹோட்டல் மற்றும் ஹோட்டல் நிர்வாகிகளுடன் நடத்திய சிறப்பு கலந்துரையாடலின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உயர்தர பரீட்சை ஒத்தி வைக்கப்பட மாட்டாது - கல்வி அமைச்சு!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 613 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பிரிவு தகவ...
சவால்கள் இருந்தால் அதனை ஏற்க பயப்பட வேண்டாம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!
|
|
|


