வெளிநாட்டு நாணயங்களுடன் இருவர் கைது!
Thursday, August 4th, 2016
இலங்கையிலிருந்து சிங்கப்பூரிற்கு சட்டவிரோதமான முறையில் மூன்றரை கோடி பெறுமதிமிக்க வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற இருவர் பண்டாரநாயக்கா சர்வதேச விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை 1.10 மணிக்கு இலங்கையிலிருந்து சிங்கப்பூரிற்கு செல்லவிருந்த சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான SQ-469 என்ற விமானத்தில் கடத்தி செல்ல முயன்றுள்ளனர்.குறித்த சந்தேகநபர்கள் தங்களின் பயணப்பையில் வைத்திருந்த அலங்கார பூக்களினுள் வெளிநாட்டு நாணயங்ளை மறைத்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இக்கடத்தலில் சம்பவத்தில் ஈடுப்பட்ட கொழும்பை சேர்ந்த 35 மற்றும் 45 வயதுடைய இருவரும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கதிகாரிகள் கைது செய்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
உலர் பழவகை ஏற்றுமதி தொடர்பில் இத்தாலியுடன் ஒப்பந்தம்!
விவசாயிகள் நிலைமையை உணர்ந்து செயற்பட வேண்டும் - இல்லையேல் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய அரிசியை இறக...
பருத்தித்துறை மரக்கறி சந்தை தொடர்பான வழக்கு - 31 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
|
|
|


