இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் மூவருக்கு கொரோனா!
Wednesday, December 30th, 2020
உக்ரைனில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாவிற்காக வருகைதந்தவர்களில் மூன்று பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையங்கள் திறக்கப்பட்டதன் பின்னர், 180 சுற்றுலாப் பயணிகளுடன் உக்ரேனிய பயணிகள் விமானம் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக விமான நிலைய செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், பைலட் திட்டத்திற்கு அமைவாக குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகளை அழைப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதற்கமைய இலங்கைக்கான முதல் சுற்றுலா பயணிகள் விமானம் உக்ரேனில் இருந்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கடந்த 24 மணிநேரத்தில் 762 கொரோனா தொற்று: கொழும்பில் மட்டும் 445 பேர் அடையாளம்!
இரண்டு மீட்டர் தூர இடைவெளியை கடைபியுங்கள் - மருத்துவ சங்கம் கோரிக்கை!
நடத்துனர் இன்றி இயங்கும் அதிநவீன பேருந்து சேவை கொழும்பில் - அமைச்சர் பந்துல குணவர்தன நடவடிக்கை!
|
|
|


