ஆரம்ப பிரிவு மாணவர்களை இரண்டு பிரிவுகளாக பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு தீர்மானம் – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, December 29th, 2020

ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆரம்ப பிரிவு பாடசாலைகளில் மாணவர்களை இரண்டு பிரிவுகளாக பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மேலும் தெரிவிக்கையில் –

மாணவர்கள் மத்தியில் தனிப்பட்ட இடைவெளியை முன்னெடுப்பதற்காகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான வேலைத்திட்டம் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும்.

மாணவர்களின் நலன்கருதியே முறையான திட்டமிடலுக்கு அமைவாகவே, ஜனவரி மாதம் 11ஆம் திகதி பாடசாலைகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது உடனடியாக எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல. விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளும் இதற்காக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. குறுகிய அரசியல் நோக்கில் இதுபற்றி கவனம் செலுத்தக்கூடாது என்றும் தெரிவீத்தள்ள அமைச்சர் பாடசாலைகளை திறக்குமாறு பெற்றோர் நாளாந்தம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். பாடசாலைகளுக்கான சுகாதார உபகரணங்களை வழங்குவதற்கென அரசாங்கம் ஆயிரத்து 50 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


பாடசாலை பாடப்புத்தகங்கள் அச்சிட இந்தியாவிலிருந்து நிதி - சீனாவிலிருந்து சீருடை- கல்வி அமைச்சர் சுசில...
அஸ்வெசும மற்றும் சமுரத்தித் திட்டத்தை ஒன்றிணைந்து நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கோபா குழு கலந்துரையா...
சீன இராணுவ உதவி திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சுக்கு வெடிகுண்டுகளை செயழிலக்கச் செய்யும் இயந்திரங்...