கிளிநொச்சியில் புரவியால் பாரிய அழிவு – விவசாயிகள் கவலை!
Tuesday, December 8th, 2020
புரவி புயலால் முழங்காவில் பிரதேசத்தில் பல ஏக்கர் வாழைத்தோட்டங்கள் அழிந்துள்ளன. அத்துடன் கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் சுமார் 50 ஏக்கர் வரையான வாழைத்தோட்டங்கள் புரெவி புயலால் அழிவடைந்துள்ளன என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடும் மழை மற்றும் புயல் காரணமாக குழைகளுடன் வாழை மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன. மிகவும் சிரமத்திற்கு மத்தியில் கடந்த வறட்சி காலத்திலும் பாதுகாத்து வளர்த்தெடுத்த வாழை மரங்கள் அறுவடைக்கு முன் இவ்வாறு அழிவடைந்துள்ளமை தங்களுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
முழங்காவில் பிரதேசம் அதிகளவு வாழைப் பயிர்ச்செய்கை பிரதேசமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடமாராட்சி பகுதியில் பிறப்பு வீதம் குறைவு சுகாதார வைத்திய அதிகாரி கவலை!
கடற்படை மற்றும் கடற்றொழில் சமூகங்களுக்கான வானிலை ஆய்வு மையம் அவசர அறிவுறுத்தல்!
சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுதலை மோட்டார் வாகன திணைக்களத்திடம் ஒப்படைக்க இராணுவம் நடவடிக்கை!
|
|
|


