சுய உற்பத்தித் துறையை ஊக்குவித்து மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தை ஈட்டுவதே எமது இலக்கு – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Friday, November 27th, 2020

வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் இந்நாட்டிலுள்ள கடற்றொழில் மற்றும் நன்னீர் வேளாண்மைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடி விஜயத்தை மேற்கொண்டு, அங்கு வாழுகின்ற துறை சார்ந்த மக்களுடன் கலந்துரையாடி, மேலும்; தேவைகள் மற்றும் பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றை நிவரத்திப்பதற்கும் நான் திட்டமிட்டுள்ளேன் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

சுய உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதன் ஊடாக மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தை ஈட்டுவதே எமது முதன்மை இலக்காகவுள்ளது. இந்த இலக்கினை கூடிய விரைவில் எட்டுவதுடன், அதன் மூலமாக ‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தை’ எமது மக்கள் அடையலாம் என எண்ணுகின்றேன்.

அந்த வகையில், எமது ஜனாதிபதி மேன்மைதங்கிய கோட்டாபய ராஜபக்ச அவர்களது தலைமைத்துத்தினாலும். எமது பிரதமர் கௌரவ மகிந்த ராஜபக்ச அவர்களது வழிகாட்டலினாலும். எனது அமைச்சின் இராஜாங்க அமைச்சர் கௌரவ கஞ்சன விஜேசேகர அவர்களின் முன் முயற்சியினாலும், அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்நாயக்க, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களப் பணிப்பானர் திரு. கஹவத்த, அமைச்சு அதிகாரிகள், அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் தலைவர்கள், உள்ளிட்ட அதிகாரிகாரிகள் அனைவரதும் பங்களிப்புடனும் இந்தப் பணிகளை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

கூட்டுறவுச் சங்கங்கள் கட்டுப்பாட்டு விலைகளில் பொருட்களை விற்க வேண்டுமானால் அரசு அப் பொருட்களை விநியோ...
சாத்தியமாக்கப்பட்டது புலிக்குளம் நீர்விநியோகத் திட்டம் - யாழ் பல்கலைக்கழக பேரவை அமைச்சர் டக்ளசுக்கு ...
FAO சர்வதேச அமைப்பின் உதவிப் பணிப்பாளர் நாயகம் மனுவேல் பராங்கே - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு...

மக்களின் இழப்பிற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் சவப்பெட்டி அரசியல்வாதிகளும் பணப்பெட்டி அரசியல் வாதி...
அமரர் சிவஞானசோதியின் இழப்பு எனக்கு மட்டுமல்லாது இலங்கைத் தீவுக்கும் பேரிழப்பு – அஞ்சலி உரையில் அமைச்...
வெடுக்குநாறி மலைக்கு நேரடியாக சென்றார் அமைச்சர் டக்ளஸ் - மக்களின் உணர்வுகள் மதிக்கப்படும் எனவும் உறு...