150ஆவது வருட சேவையை பூர்த்தி செய்யும் இலங்கை பொலிஸ் !
Tuesday, August 2nd, 2016
இலங்கை பொலிஸ் சேவையின் 150ஆவது வருட பூர்த்தி நிகழ்வு எதிர்வரும் மாதம் கொண்டாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
இலங்கை பொலிஸ் நிலையம் தமது சேவையினை ஆரம்பித்து 150 வருடங்கள் பூர்த்தியாகவுள்ளது. இந்நிலையில் குறித்த நிகழ்விற்கான இலட்சினை அறிமுகப்படுத்தப்படும் நிகழ்வு இன்று காலை கொழும்பு தடயவியல் துறை நிலையத்தில் இடம் பெற்றது.
நிகழ்வில் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Related posts:
உயர்தர வினாத்தாள் ஏற்கனவே வெளியானதா?
வெலிக்கடை சிறைச்சாலை பெண்கள் விடுதியில் திடீர் சோதனை - பெருமளவு கைபேசிகள் மீட்பு!
வளிமண்டலவியல் திணைக்களத்தின் ரேடார் அமைப்பின் கட்டுமான பணிகளின் தோல்வி - அரசாங்கத்துக்கு 78 மில்லியன...
|
|
|


