கொழும்பு துறைமுகத்தில் அடையாளம் காணப்பட்ட சில பிரிவுகளின் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஓய்வு பெற்ற ஊழியர்களை அழைக்க தீர்மானம்!
Friday, November 13th, 2020
கொழும்பு துறைமுகத்தில் அடையாளம் காணப்பட்ட சில பிரிவுகளின் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஓய்வு பெற்ற ஊழியர்களை அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஏனைய சில நிறுவனங்களின் ஊழியர்களையும் கடமைகளுக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தள்ள அவர் நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு பல்வேறு நாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகை தந்துள்ள 14 கப்பல்களை கொழும்பு துறைமுக வளாகத்திற்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளும் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாடு இயல்பு நிலைக்கு திரும்பினாலும் வரையறைகளின் அடிப்படையிலேயே செயற்பாபடுகள் அனைத்தும் நடைபெறும் - ப...
நாடு முன்னேறுவதை சில தரப்பினர் விரும்பவில்லை - நீதி அமைச்சர் அலி சப்ரி குற்றச்சாட்டு!
ஜனாதிபதித் தேர்தல் - விடுமுறை வழங்கத் தொழில் வழங்குநர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - தேர்தல்கள் ஆணை...
|
|
|


