பிரதான குருதி வங்கியில் குருதிக்கு தட்டுப்பாட்டு – இரத்த தானம் செய்ய முன்வாருங்கள் என பொதுமக்களிடம் இரத்த வங்கியின் பணிப்பாளர் அவசர வேண்டுகோள்!
Friday, November 6th, 2020
இலங்கையின் பிரதான குருதி வங்கியில் குருதிக்கு தட்டுப்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்று நிலைமைகளினால், நோயாளிகளுக்கு குருதி வழங்குவதில் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது.
அண்மைக் காலமாகவே இரத்த தான நிகழ்வுகள் நடத்துவதில் பெரும் நெருக்கடி நிலைமை காணப்பட்டுவருவதனால் குருதி வங்கியில் போதியளவு கையிருப்பு கிடையாது என இரத்த வங்கியின் பணிப்பாளர் லக்ஸ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஊரடங்குச் சட்டம் காரணமாக இரத்த தானம் செய்ய வரும் கொடையாளர்களுக்கு வருகை தர முடியாதுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குருதிக்கு நிலவி வரும் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு கொடையாளர்கள் இரத்த தானம் செய்ய முன்வர வேண்டுமென அவர் மக்களிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிராந்திய விமானத்தளமாக மாறவுள்ள பலாலி விமானத்தளம்! - இந்தியா ஆய்வு!!
உலக பாரம்பரிய அந்தஸ்த்தை இலங்கையின் சில பகுதிகள் இழக்கும் - கல்வி அமைச்சர்!
ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றில் - ஐவர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்டமா ...
|
|
|
கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் காலனித்துவமாக மாறாது - இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் உறுத...
இராணுவ அதிகாரிக்கு எதிரான தடை : அமெரிக்காவுடன் முரண்பட முடியாது என அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவு தொடரும் – அந்நாட்டு வெளிவிவகார அம...


