நாட்டின் வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரிப்பு – சுவாச நோயாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர்!
Monday, November 2nd, 2020
நாட்டின் வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளதாககவும் குறிப்பாக தென் மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளது என்றும தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர் பேராசிரியர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கடந்த மாதம் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தூசு துகள்களின் செறிவு 100 முதல் 150 ஆக அதிகரித்துள்ளதாகவும் இதனால் சுவாச நோயாளர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கைக்கு அண்மைய நாடான இந்தியாவில் ஏற்பட்ட வளி மாசடைவு மற்றும் நாட்டின் வளிமண்டல எல்லைப்பகுதியில் ஏற்பட்ட மாசடைவு ஆகியன இதற்கு காரணம் என்றும் பேராசிரியர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உயிரிழப்பு 31 ஆக அதிகரிப்பு!
இலங்கை அரசாங்கத்தின் மொத்த சொத்து மதிப்பு!
48 பக்கங்களுடன் நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் காட்சிப்படுத்தலுடன் அறிமுகமானது புதிய கடவுச்ச...
|
|
|
சட்ட ஆய்வு கவுன்சில் எடுத்துள்ள தீர்மானத்திற்கும் எமக்கும் தொடர்பில்லை -சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்...
ஜனாதிபதி ரணிலின் தலைமையின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் சிறப்பாக உள்ளன - ஜப்பானிய வெளியுறவுத்த...
திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன பங்கேற்கவில்லை என வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை - நித...


