கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்பம் வெளிநாடாக இருக்கலாம் – இராணுவத் தளபதி தெரிவிப்பு!
Sunday, October 18th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் ஆரம்பம் வெளிநாடாக இருக்கலாம் என இராணுவ தளபதி லெப்டின்ன ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் கந்தகாடு கொரோனா கொத்தணி தொடர்பில் இறுதியாக ஓகஸ்ட் மாதம் இனங்காணப்பட்டதாகவும் அதனடிப்படையில் இந்நாட்டில் சமூகத்திற்கு இடையில் கொரோனா இருக்கவில்லை எனவும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.
மேலும் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு சிலர் வருகை தந்ததாகவும் கடற்படை நடைவடிக்கைகளுக்காக வருகை தந்த 6 பேரும் நேற்றும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீண்டும் பயங்கரவாத தாக்குதல் - இலண்டனில் பொதுமக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை!
63 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – தண்டப்பணமாக 25 இலட்சம் அறவீடு - யாழ்ப்பாண மாவட்ட பாவனைய...
2024 ஆம் ஆண்டு இரண்டு பிரதான தேர்தல்கள் நடைபெறும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
|
|
|


