அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் 100 மாதிரி வீடுகள் அமைக்க திட்டம் – பிரதமர் மஹிந்த தெரிவிப்பு!
Tuesday, September 29th, 2020
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தேர்தல் தொகுதி களிலும் சுமார் 100 மாதிரி வீடுகளை அமைக்கும் வேலைத் திட்டமொன்று விரைவில் முன்னெடுக்கவுள்ளதாகப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஒவ்வொரு தேர்தல் தொகுதிகளிலும் 100 வீடுகளுடன் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை நிர்மாணிக்க எதிர்பார்த்துள்ளதாகப் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவன தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்து ரையாடலில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள வீட்டு பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக இந்த அடுக்குமாடி வளாகங்கள் நிர்மாணிக்கப்படும் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனா தொற்று - இலங்கையில் முக்கிய பரீட்சைகள் பிற்போடப்பட்டன - பரீட்சைகள் ஆணைக்குழு அறிவிப்பு!
நவீன பாதுகாப்பு வசதிகளுடன் புதிய இடத்திற்கு வெலிக்கடை சிறையை மாற்ற நடவடிக்கை - சிறைச்சாலை மறுசீரமைப்...
மேலும் ஒரு தொகை சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன!
|
|
|


