நியூயோர்க்கில் துப்பாக்கிச்சூடு: இருவர் உயிரிழப்பு, டசின் கணக்கானோர் காயம்!
Saturday, September 19th, 2020
நியூயோர்க்கின் ரொசெஸ்ரர் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது, 13 பேர்வரை காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு மக்கள் கூடியிருந்த பகுதியொன்றில் இடம்பெற்றுள்ள நிலையில், பாதிப்பு குறித்த முழுமையான தகவலை பொலிஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை
Related posts:
டைம் இதழில் இடம்பிடித்த தமிழர்!
அயர்லாந்தின் புதிய பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து.
மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 474 வெளிநாட்டினர் கைது!
|
|
|


