யாழ்.மாநகர சபை எல்லைக்குள் பொலித்தீன் பாவனை முற்றாகத் தடை – வியாபாரிகளுக்கு 15 ஆம் திகதி வரை கால அவகாசம்!
Tuesday, September 8th, 2020
யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட மரக்கறிச் சந்தைகள் மற்றும் இறைச்சிக் கடைகளில் பொலித்தீன் பாவனை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரப் பணிமனை சுகாதார வைத்திய அதிகாரி பால்முரளி இதை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு கால அவகாசம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது.
அதன் பிற்பாடு பொலித்தீன் பயன்படுத்தப்படின் வியாபார நிலைய உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலித்தீன் பாவனையை முற்றாகத் தடை செய்யும் தீர்மானம் மாநகர சபையின் மாதாந்த பொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழ்நாட்டு போராட்டங்களுக்கு அஞ்சப்போவதில்லை: மஹிந்த அமரவீர!
குமார் சங்கக்கார அரசியலுக்கு வந்தால் முழு ஆதரவு - அமைச்சர் ராஜித!
1000 ரூபா கொடுப்பனவு நடைமுறை விவகாரம் 5 ஆம் திகதிமுதல் நடைமுறையில் - தொழில் ஆணையாளர்!
|
|
|


