“ஒரே நாடு ஒரே சட்டம்” என்பது இனத்துவம் அல்ல சமத்துவம் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, August 21st, 2020

“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற ஜனாதிபதி அவர்களின் கொள்கைப்பிரகடனத்தின் உள்ளடக்கம்  இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கும்  சமத்துவமான உரிமை என்பதே ஆகும்.  ஒரே நாடு ஒரே சட்டம் என்பது இனதுவமல்ல சமத்துவம். இங்கு சகல இன மக்களினதும் இனத்துவ அடையாளங்கள் சமத்துவமாகப் பேணப்கபடும். இதை நான் நம்பிக்கையுடன் வரவேற்கிறேன் என கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளர்.

இலங்கையின் ஒன்பதாவது புதிய நாடாளுமன்றில் நேற்றையதினம் கொள்கைவிளக்க உரை நிகழ்த்தியபோது ஜனாதிபதி  கோட்டபய ராஜபக்ச ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கருத்தீட்டிற்கு அமைய புதிய அரசியல் அமைப்பு அறிமுகப்படுத்தப்படும் அதேவேளை, அரசாங்கத்தின் முதல் பணியாக மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டவாறு அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நீக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:

சிறு ஏற்றுமதிகளை ஊக்குவிக்க மீள் ஏற்றுமதிகளை தடைசெய்ய வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மீன்பிடி படகுகளுக்கு 2 ஆம் கட்ட இலவச மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம...
நான் மன்னித்துவிட்டேன் - சட்டமா அதிபருடன் கலந்துரையாடி அந்தப் பெண்மணியின் விடுதலைக்கு நடவடிக்கை எடு...

அரச பொது வேலைத்திட்டங்கள் வகுக்கப்படும்போது தமிழ் சொற் பதங்கள் இணைக்கப்படாதிருப்பது ஏன்? நாடாளுமன...
அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து - வடக்குக் கடலில் கடலுயிரினங்களின் இனபெருக்கத்தினை அதிகரிப்பதற்கு நடவடி...
எமது நிலைப்பாட்டை ஏற்று எம்மோடு பயணிக்க விரும்புபவர்களை அரவணைத்துச் செல்லத் தயார் - அமைச்சர் டக்ளஸ்...