ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதிருப்தி !
Monday, August 10th, 2020
நாடாளுமன்ற தேர்தல் வெற்றியாளர்களில் சிலர் அமைச்சர் பதவி பெற்றுக்கொள்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றியாளர்கள் பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் அமைச்சர் பதவிகளைப் பெற ஜனாதிபதியிடம் கோரி யுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுபோன்ற கோரிக்கைகளை முன்வைக்கும் கட்சி களு க்கு வேலை செய்வதற்கு அமைச்சர் பதவி கட்டாயம் தேவையா என ஜனாதிபதி கேட்டுள்ளார்.
சலுகை பெற்றும் நோக்கில் அரசியலில் நுழையும் அரசி யலில் வாதிகளால் நாட்டின் முன்னேற்றம் தடைப்பட்டு என்றும், சலுகை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இல்லா மல் நாட்டுக்காக தங்களை அர்ப்பணிக்க உள்ளவர்களே தனக்குத் தேவை என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
Related posts:
கனிய வளங்கள் ஏற்றிச்செல்ல பதிவு செய்திருப்பது அவசியம் - புவிச்சரிதவியல் பணியகம் !
மருதங்கேணி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் உதவித்த...
குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாக கைதான 24 பேரிடமும் CID கடுமையான விசாரணை!
|
|
|


