பொது சுகாதார பரிசோதகர்களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய வரைவு சுற்றறிக்கை சட்டத்திற்கு முரணானது – சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா சுகாதார செயலாளருக்கு அறிவிப்பு!

Saturday, July 25th, 2020

தேர்தல் காலத்தின்போது கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் அடங்கிய வரைவு சுற்றறிக்கை சட்டத்திற்கு முரணானது என சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா சுகாதார செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

பிரசாரக் கூட்டங்களில் மற்றும் வாக்குச் சாவடிகள் நேரடியாக நுழைந்து நபர்களை கைது செய்யவும், வழக்குத் தொடரவும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு வழங்கப்படுள்ள அதிகாரங்கள் நீக்கப்பட்டு குறித்த அதிகாரங்கள் சுகாதார வைத்திய அதிகாரிகளின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி சட்டத்தரணி நிஷாரா ஜயவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இலங்கையின் பொருளாதார மீளெழுச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் - ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஜப்பான் தூத...
வீதி மின் விளக்குகளுக்கு கட்டணம் செலுத்த முடியவில்லை - வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!
சங்கானை கிழக்கு  மக்களை  சீர்குலைக்கும் வெள்ள நீர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் - வலி மேற்கு உறுப்ப...